» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென்கொரிய முன்னாள் அதிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:25:46 AM (IST)

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய முன்னாள் அதிபர் யூன் சக் இயோல்-க்கு உச்ச நீதிமன்றம் சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சக் இயோல், அதிகாரத்தைத் தக்கவைக்க ராணுவ ஆட்சியை அமல்படுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார். சியோல் உச்ச நீதிமன்றம் இதனை "மிகப்பெரிய தேசத்துரோகம்" எனக் குறிப்பிட்டு, அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
ராணுவச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் பதவியிழந்தார். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததால் மரண தண்டனைக்கு பதிலாக இத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தச் சதிக்கு உதவிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 30 ஆண்டுகளும், முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)

அமெரிக்காவில் காகித ஆலையில் நச்சு ரசாயன தொட்டி வெடித்து விபத்து - 11 பேர் பலி? மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 30, மே 2026 12:53:29 PM (IST)


