» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!

சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)

vietnamBoat.jpg

வியத்நாமில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

தெற்கு வியத்நாமில் உள்ள பு குவாக் தீவு அருகே 32 இந்தியர்கள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு காலை 11:30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக் கோர விபத்தில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களில் 10 க்கும் மேற்பட்டோர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு (தந்தை பெயர்: ஆறுமுகம்) என்பவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தனது நண்பருடன் வியத்நாம் சென்றிருந்தார். உயிரிழந்த இதர நபர்கள் யார் யார் என்பது குறித்த முழுமையான விபரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இப்படகு விபத்து தொடர்பாகப் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள ஹோ சி மின் நகரத்தில் அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள +84 91 308 9165 என்ற அவசர எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory