» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சூடான் உள்நாட்டுப் போரில் ஒரே வாரத்தில் 6,000 பொதுமக்கள் படுகொலை: ஐ.நா. கடும் கண்டனம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:28:53 PM (IST)

சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அப்பாவி பொதுமக்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான 'சூடான் ஆயுதப் படை'க்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான 'விரைவு அதிரடிப் படை' (RSF) எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது.
காரணம்: துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்.எஸ்.எப். (RSF) படைகள் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்:
அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில், ஒரே வாரத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 25 முதல் 27 வரையிலான மூன்றே நாட்களில், நகருக்குள் இருந்த 4,400 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உட்பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ள புகார்கள்: ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களைக் குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகள் சிறையான அவலம்: குழந்தைகளுக்கான மருத்துவமனையைச் சிறைச்சாலையாக மாற்றி, ஆயிரக்கணக்கானோரை அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)


