» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தோனேசியாவில் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு: அரசு முடிவு
செவ்வாய் 17, டிசம்பர் 2024 8:34:32 AM (IST)
இந்தோனேசியாவில் சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க சுமார் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.
அப்போது போதைப்பொருள் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதேபோல் அரசாங்கத்தை விமர்சித்த குற்றத்துக்காகவும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
எனவே சிறையில் கூட்ட நெரிசலை குறைக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி சிறையில் உள்ள 44 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த சிறை கைதிகளில் சுமார் 30 சதவீதம் ஆகும்.
இதற்காக சிறையில் உள்ள கைதிகளின் குற்ற விவரங்கள் மற்றும் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் சேகரித்து வருகிறது. இந்த பட்டியல் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவரது ஒப்புதல் பெற்று கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என மனித உரிமைகள் விவகாரத்துறை மந்திரி நடாலியஸ் பிகாய் கூறினார்.
மேலும் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)
