» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் : இந்திய தூதரகம் வேண்டுகோள்
சனி 18, மே 2024 5:42:58 PM (IST)
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர்கள் தாக்கப்பட்டிருப்பதால் அங்கு வாழும் பிற நாட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் மீது கிர்கிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மிக கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது போல் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்: இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள்ளே யே இருங்கள். யாருக்கும் உதவி ஏதும் தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை கட்டுப்பாட்டு அறை எண்: 0555710041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)
