» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் : இந்திய தூதரகம் வேண்டுகோள்
சனி 18, மே 2024 5:42:58 PM (IST)
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர்கள் தாக்கப்பட்டிருப்பதால் அங்கு வாழும் பிற நாட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் மீது கிர்கிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மிக கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது போல் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்: இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள்ளே யே இருங்கள். யாருக்கும் உதவி ஏதும் தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை கட்டுப்பாட்டு அறை எண்: 0555710041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)


.gif)