» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் : இந்திய தூதரகம் வேண்டுகோள்
சனி 18, மே 2024 5:42:58 PM (IST)
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டவர்கள் தாக்கப்பட்டிருப்பதால் அங்கு வாழும் பிற நாட்டவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் மீது கிர்கிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
கிர்கிஸ்தானில் பாகிஸ்தான் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மிக கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவியை செய்யுமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது போல் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்: இந்திய மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள்ளே யே இருங்கள். யாருக்கும் உதவி ஏதும் தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை கட்டுப்பாட்டு அறை எண்: 0555710041 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)

அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 % வரி: டிரம்ப் அதிரடி
செவ்வாய் 20, மே 2025 12:44:14 PM (IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு
திங்கள் 19, மே 2025 11:13:47 AM (IST)

வாடிகனில் போப் 14-ம் லியோ பதவியேற்பு: புனித பீட்டர் சதுக்கத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்!
திங்கள் 19, மே 2025 8:57:48 AM (IST)

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்
ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)
