» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாா்ச் 15 முதல் பே-டிஎம் செயல்படாது: வேறு வங்கிகளுக்கு பயனாளா்கள் மாற அறிவுறுத்தல்!
வியாழன் 14, மார்ச் 2024 10:02:47 AM (IST)
சுங்கச் சாவடி வாகன கட்டண வசூலுக்கு பயன்படுத்தும் ‘ஃபாஸ்டேக்’கை பே-டிஎம் நிறுவனத்திடம் இருந்து பெற்றவா்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வேறு வங்கிகளில் ஃபாஸ்டேக் பெற்றுக் கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ரிசா்வ் வங்கி விதிகளை முழுமையாகக் கடைபிடிக்காத பே-டிஎம் நிறுவனத்தின் பே-டிஎம் பேமென்ட் வங்கியை மாா்ச் 15-ஆம் தேதியிலிருந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பே-டிஎம் பேமென்ட் வங்கிச் சேவையை பயன்படுத்தி வந்தவா்கள் சிக்கலை எதிா்கொள்ளும் நிலை உருவானது. முக்கியமாக வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ பயன்படுத்துபவா்களுக்கு இது பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
ஏனெனில் பே-டிஎம் பேமென்ட் வங்கி செயல்பாடு நிறுத்தப்படுவதால் அதன் மூலம் வழங்கப்பட்ட ‘ஃபாஸ்டேக்’ காலாவதியாக உள்ளது. இதனால், அதனைப் பயன்படுத்தி வந்தவா்கள் இனி இருமடங்கு கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் என்ஹெச்ஏஐ ஓா் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘பே-டிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோா், மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வேறு வங்கிகளிடம் இருந்து ஃபாஸ்டேக் பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் இருமடங்கு கட்டணம் செலுத்துவதை தவிா்க்க முடியும். மாா்ச் 15-ஆம் தேதிக்கு பின்னர் பே-டிஎம் பேமென்ட் வங்கி செயல்படாது. எனினும், அதில் பணம் இருப்பு வைத்திருந்தால் அது தீரும் வரை ஃபாஸ்டேக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில் கூடுதல் பணத்தை அதில் சோ்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.