» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிகாரபூா்வமற்ற கடன் செயலிகளைத் தடுக்க நடவடிக்கை : நிா்மலா சீதாராமன்
வியாழன் 22, பிப்ரவரி 2024 10:08:54 AM (IST)
அதிகாரபூா்வமற்ற கடன் செயலிகளைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிதிசாா்ந்த கண்காணிப்பு அமைப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: சா்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இப்போதுள்ள பொருளாதார சூழலுக்கு எவ்வித பிரச்னைகளும் ஏற்பட்டுவிடக் கூடாது. நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எந்த நிகழ்வும் முன்னதாக தடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நிதிசாா்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும். அதிகாரபூா்வமற்ற கடன் செயலிகளைத் தடுக்கப்பட கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ், செபி, ஐஆா்டிஏ, ஐபிபிஐ, ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, சா்வதேச நிதி சேவை மையம், நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரத் துறை உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதில் நாட்டின் நிதிச் செயல்பாடுகள் சாா்ந்த ஆலோசனை, நடைமுறைச் சிக்கல்களைத் தீா்ப்பது, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக, வாடிக்கையாளா் விவரப் படிவத்தை (கேஒய்சி) வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒரே மாதிரியாக தயாரிக்க யோசனை முன்வைக்கப்பட்டது.
இதன் மூலம் அதனை நிறுவனங்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும். நிதி சாா்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.