» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி

செவ்வாய் 12, மே 2026 8:07:02 AM (IST)

கோவில்பட்டியில் நடந்து வரும் மாநில சீனியர் ஆக்கி போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கோயம்புத்தூர், அரியலூர், விருதுநகர், தஞ்சாவூர், மதுரை ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

தூத்துக்குடி ஆக்கி கழகம் சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. முதலில் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 3-வது நாளான நேற்று திருப்பூர் மாவட்ட அணியை விருதுநகர் மாவட்ட அணி 4 - 1 என்ற கோல் கணக்கிலும், திருவாரூர் அணியை சிவகங்கை அணி 3 - 0 என்ற கோல் கணக்கிலும், புதுக்கோட்டை அணியை நீலகிரி அணி 7 - 0 என்ற கோல் கணக்கிலும், தேனி அணியை தஞ்சாவூர் அணி 8 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன.

ராணிப்பேட்டை அணியை கோயம்புத்தூர் அணி 2 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவள்ளூர் அணியை திருவாரூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கிலும், தென்காசி அணியை ராமநாதபுரம் அணி 14 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவண்ணாமலை அணியை அரியலூர் அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், திருவள்ளூர் அணியை மதுரை அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், தர்மபுரி அணியை சென்னை அணி 2 - 1 என்ற கோல் கணக்கிலும், 

கரூர் அணியை திருநெல்வேலி அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், காஞ்சிபுரம் அணியை கன்னியாகுமரி அணி 6 - 1 என்ற கோல் கணக்கிலும், சேலம் அணியை திருச்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கிலும், திண்டுக்கல் அணியை விழுப்புரம் அணி 4 - 0 என்ற கோல் கணக்கிலும், வேலூர் அணியை நாமக்கல் அணி 4 - 3 என்ற கோல் கணக்கிலும், செங்கல்பட்டு அணியை தூத்துக்குடி அணி 3 - 1 என்ற கோல் கணக்கிலும், கன்னியாகுமரி அணியை தர்மபுரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன. இதே போல், கிருஷ்ணகிரி அணியுடன் திருப்பூர் அணி மோதிய போட்டியில் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் நிலையை பெற்றது.

காலிறுதி ஆட்டங்கள் :

முதல் போட்டி: சென்னை vs கோயம்புத்தூர்

2-வது போட்டி: திருநெல்வேலி vs தூத்துக்குடி

3-வது போட்டி: விருதுநகர் vs தஞ்சாவூர்

4-வது போட்டி: மதுரை vs அரியலூர்

நாளை (புதன்கிழமை) காலையில் அரையிறுதி போட்டிகளும், மாலையில் இறுதி போட்டிகளும் நடைபெறுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory