» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்ச்சைக்குரிய சைகை: பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:38:42 AM (IST)
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:02:33 PM (IST)

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்: அறிமுகப் போட்டியிலேயே வரலாறு படைத்த பிரஃபுல் ஹிங்கே!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:25:17 PM (IST)

ஐபிஎல் 2026: அதிரடி ஆட்டத்தில் தடுமாறும் மும்பை - டாடீஸ் ஆர்மி உத்தி தோல்வியா?
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:58:37 PM (IST)

முடிவுக்கு வந்த தோல்விப் பயணம்: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:43:14 AM (IST)

வைபவ் - ஜூரல் அதிரடி பேட்டிங்: ஆர்.சி.பி. அணியை வீழத்தி ராஜஸ்தான் 4-வது தொடர் வெற்றி!
சனி 11, ஏப்ரல் 2026 11:10:54 AM (IST)

கொல்கத்தாவை கதறவிட்ட முகுல் சவுத்ரி: 7 சிக்ஸர்கள் விளாசிய தோனி ரசிகர்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:29:44 PM (IST)

