» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆடவர் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றார்!
வியாழன் 5, ஆகஸ்ட் 2021 5:01:43 PM (IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் (ஆர்.ஓ.சி.) ஜாவுர் உகுயேவை எதிர்கொண்டார்.
ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரரைத் தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள 5-வது பதக்கம் இது. இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.