» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)
புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வலுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் ஜல்லி, கற்கள் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குப் 'பாஸ்' வழங்கும்போதே, ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் வீதம் பசுமை வரி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தால், எல்லையைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறையும் என்று கருதப்படுகிறது. கனிமவளக் கடத்தலை முடக்கத் தமிழக அரசு இத்தகைய கடுமையான புதிய வரி விதிப்புத் திட்டத்தைப் பரிசீலித்துச் செயல்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு விண்ணப்பம்: சிறப்பு தட்கல் முறையில் இன்று கடைசி நாள்
செவ்வாய் 16, ஜூன் 2026 10:43:17 AM (IST)


