» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)
தமிழக ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் ஜெ.சவான் நியமனம் உட்பட 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் மு.சாய்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உயர்கல்வித்துறை சிறப்பு செயலராகவும், அறிவியல் நகர துணைத்தலைவர் ஹர் சகாய் மீனா, நில சீர்திருத்த ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர், அஜய் யாதவ், பால் உற்பத்தித்துறை ஆணையர் மற்றும், ஆவின் மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்,
தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.விஜயாராணி, தோட்டக் கலைத்துறை இயக்குநராகவும், இப்பதவியில் இருந்த பி.குமரவேல்பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராகவும், அரியலூர் முன்னாள் ஆட்சியர் பி.ரத்தினசாமி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும், திருநெல்வேலி முன்னாள் ஆட்சியர் ஆர்.சுகுமார், எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் மேலாண் இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி இயக்குநராக இருந்த ஏ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநராகவும், சர்க்கரைத்துறை முன்னாள் இயக்குநர் டி.அன்பழகன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை முன்னாள் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண் இயக்குநராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இருந்த எஸ்.விசாகன், அறிவியல் நகர துணைத் தலைவராகவும், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஆர்.அனாமிகா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஞ்ஜித் சிங், தென்காசி ஆட்சியராகவும், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் துர்கா மூர்த்தி, திண்டுக்கல் ஆட்சியராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், ஆளுநரின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.சரவணன், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு இணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை ஆணையர் எம்.பிரதிவிராஜ், கரூர் மாநகராட்சி ஆணையராகவும், எல்காட் செயல் இயக்குநர் வி.தீபனவிஷ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும் சிதம்பரம் சார் ஆட்சியர் எஸ்.கிஷன்குமார், கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பில் தீவிபத்து: தொழில்நுட்ப வல்லுநர் பலி! – இருவர் கைது!
புதன் 3, ஜூன் 2026 5:33:18 PM (IST)

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்பி சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
புதன் 3, ஜூன் 2026 5:03:40 PM (IST)

2016 ராதாபுரம் தேர்தல் முடிவுகள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதன் 3, ஜூன் 2026 4:55:48 PM (IST)

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)


