» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - 6 பைக்கள் பறிமுதல்!

திங்கள் 1, ஜூன் 2026 4:27:56 PM (IST)

நெல்லை அருகே தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ் காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித் (30), மகாராஜன் (56) உள்ளிட்ட 6 பேர் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீஸார் நடத்திய சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (19) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. மேலும், இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory