» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு! – 2பேர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 11:04:16 AM (IST)
தூத்துக்குடியில் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக முன்னாள் தர்மகர்த்தாவை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் கணேசன் (70). இவர் அப்பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாக பொறுப்பு வகித்து வந்தார். இக்கோவில் நிர்வாகம் செய்வதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் பிரபு சங்கர் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகளும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகக் கணேசன் தனது தர்மகர்த்தா பதவியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அதிலிருந்து இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்களாகத் தீவிர முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பத்ரகாளி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் வரவிருக்கும் ஆவணி மாத கொடை விழா நடத்துவது சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, விழா ஏற்பாடுகள் தொடர்பாகக் கணேசனுக்கும் பிரபு சங்கருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிப் பலத்த தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்த முக்கியப் பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, நேற்றிரவு முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு கணேசன் நின்றுகொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குப் ஆயுதங்களுடன் வந்த பிரபு சங்கரின் ஆதரவாளர்களான தூத்துக்குடி சக்தி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் பொன்ராஜ் (25), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் இசக்கி (22) உட்பட 5 பேர் கொண்ட கும்பல், கணேசனைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன் இரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் துரித நடவடிக்கையால், தப்பியோடிய முதன்மை குற்றவாளிகளான பொன்ராஜ் மற்றும் இசக்கி ஆகிய 2 பேரையும் சம்பவம் நடந்த அடுத்த 10 நிமிடங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாகச் சட்டம்-ஒழுங்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இக்கொலை முயற்சிச் சம்பவம் முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா பங்கேற்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:37:29 PM (IST)

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)


