» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பு: திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சனி 18, ஏப்ரல் 2026 5:01:01 PM (IST)
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தின் அரசியல் பலத்தை அதிகரிக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம், தமிழகம் தனக்குரிய பங்கான கூடுதலாக 20 நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால் தமிழகம் 9 எம்பிக்களை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், தற்போது 2026 மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது இன்னும் கூடுதலாக எம்பிக்களை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் போதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்தார் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார். ஆனால், இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் அந்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம், தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்குப் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவித்துவிட்டு, பெண்கள் அதிகாரம் பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட்டு திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தப் பிரதமர் வழங்கிய வாய்ப்பைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகத் திமுகவே காரணமாகிவிட்டது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று த.வெ.க. தலைவர் விஜய் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 4:36:39 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சனி 18, ஏப்ரல் 2026 4:31:58 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை: ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!
சனி 18, ஏப்ரல் 2026 12:37:52 PM (IST)

மக்களவையில் 3 மசோதாக்கள் தோல்வி: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!
சனி 18, ஏப்ரல் 2026 10:30:16 AM (IST)

மழை, கொரோனா காலங்களில் உங்களோடு நின்றவள் நான்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
சனி 18, ஏப்ரல் 2026 10:24:27 AM (IST)

