» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST)



தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசை, இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" எனத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூருக்கு நேற்று புதன்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை, அமைச்சார் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக வேட்பாளர் பை.மூ. ராமஜெயம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஓட்டப்பிடாரம் பிரதான பஜாரில் திரண்டிருந்த மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தொழில் வளர்ச்சி: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ₹16,000 கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி, ₹150 கோடி மதிப்பில் தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், சாலை வசதிகள் மற்றும் மேம்பாலங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்:

"முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 'விடியல் பயணத் திட்டம்' மூலம் இன்று பெண்கள் மாதம் ₹900 முதல் ₹1,000 வரை சேமிக்கின்றனர். அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்," எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழக நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசுக்குத் தக்க பதிலடி கொடுக்க, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுக வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் காரில் சோதனை:

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதியை ஆதரித்துக் கயத்தாறு பகுதியில் பிரசாரத்தை முடித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர், மாலையில் இளையரசனேந்தல் சாலை வழியாகப் பிரசாரத்திற்குப் புறப்பட்டார்.

அப்போது, நிலையான கண்காணிப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், உதயநிதி ஸ்டாலின் கார் மற்றும் அவருடன் வந்த வாகனங்களை மறித்துச் சோதனை செய்தனர். காரில் ரொக்கப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனையில் எதுவும் சிக்காத நிலையில், அவர் பிரசாரத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory