» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏப். 17 முதல் கோடை விடுமுறை: மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:14:02 AM (IST)
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை நாளை (ஏப். 17) முதல் தொடங்குகிறது.
ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் கழிக்கப் பெற்றோர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் உடல்நலன் குறித்த வழிகாட்டுதல்கள்:
நீர்நிலைகள்: விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதைப் பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.
வெப்பத்தைத் தடுத்தல்: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே செல்வதையும் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகளின் போது மாணவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
சமச்சீரான உணவு: மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பாரம்பரிய உணவுகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பழ வகைகளை வழங்க வேண்டும்.
சுத்தம்: தினமும் இருவேளை பல் துலக்குதல் மற்றும் குளித்தல் போன்ற சுகாதாரமான பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.
மனநலன் மற்றும் சமூகத் தொடர்புகள்:
டிஜிட்டல் தவிர்ப்பு: தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
சமூகத் தொடர்பு: தனிமை உணர்வைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், இசை கேட்டல் போன்ற செயல்பாடுகள் மூலம் சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
திறன் மேம்பாடு மற்றும் கற்றல்:
வாசிப்புப் பழக்கம்: மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, நாள்தோறும் ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப கதைகள், பொது அறிவு நூல்கள் மற்றும் நீதி நூல்களை அறிமுகப்படுத்தலாம்.
கலை ஆர்வம்: இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அந்தத் துறைகளில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
நற்பண்புகள்: பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் மாணவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை: ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!
சனி 18, ஏப்ரல் 2026 12:37:52 PM (IST)

மக்களவையில் 3 மசோதாக்கள் தோல்வி: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!
சனி 18, ஏப்ரல் 2026 10:30:16 AM (IST)

மழை, கொரோனா காலங்களில் உங்களோடு நின்றவள் நான்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
சனி 18, ஏப்ரல் 2026 10:24:27 AM (IST)

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

