» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கே த.வெ.க-வில் வாய்ப்பு: அமைச்சர் கீதா ஜீவன் கிண்டல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:02 AM (IST)
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகியவர்களையும், வாய்ப்பு கிடைக்காதவர்களையும் தேடிப்பிடித்து தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாகக் களம் காண்கிறது. திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கருணாநிதி (கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர்) நிச்சயமாகப் பெரும் வெற்றி பெறுவார்."
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தமிழக தேர்தல் வரலாற்றில் எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 'கதாநாயகன்' மற்றும் 'கதாநாயகி'யாக இருக்கும். தற்போதைய தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சூப்பர் ஸ்டார்' என்று வர்ணித்துள்ளார். மக்கள் திமுகவின் வாக்குறுதிகளை மட்டுமே நம்புவார்கள்."
"எங்களது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ. 8,000 மதிப்பிலான பரிசுக்கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவைப் பார்த்து நகல் எடுக்கப்பட்டது அல்ல. மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி இது குறித்துப் பேசினார். எங்களது தேர்தல் குழு ஒரு மாதமாகத் திட்டமிட்டு, மக்களுக்கான பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தக் கூடிய வகையில் இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளது."
"தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களைத் தேடிப் பிடித்த கதை அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, ஆர்.எஸ். முருகன் என்பவர் திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார்; இங்கு வாய்ப்பு கிடைக்காததால் இன்று த.வெ.க வேட்பாளராகியுள்ளார். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன் நாங்குநேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது த.வெ.க வேட்பாளராகிவிட்டார்.
திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகியவர்களைத் தேடிப் பிடித்து சீட் வழங்குவதுதான் அக்கட்சியின் தற்போதைய நிலைமையாக உள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான் நடிகர் விஜய் தனது கட்சியின் உண்மை நிலையை அறிந்துகொள்வார்." இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

