» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

சங்கரன்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தனியார் கட்டிடத்தின் மாடியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 7 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் வங்கியில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. எனினும், பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விடுமுறை நாள் என்பதால் வங்கியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

மாபெரும் காதுகுத்து விழா: வினோத அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:06:48 PM (IST)

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய் : மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:53:31 AM (IST)

