» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம்: தொடக்கி வைத்த முதல்வர்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 11:21:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 9) வழங்கினார்.

திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உணவு வாகனத்தை கொடியசைத்து முதல்வர் தொடக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து உணவு விரிவாக்க திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், சுதர்சனம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸிரி, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆணையாளர் தாமோதரன், நகர் மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory