» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!

சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)


கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகளை ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார். 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தனது 2025-2026 உள்ளுர் பகுதி வளர்ச்சி நிதியின் மூலம் 30 மேஜை நாற்காலிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமானராபர்ட் புரூஸ் வழங்கினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்பாமாவரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி மன்ற தலைவர் பார்வதி இசக்கி பாண்டியன் துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அன்னதாய் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்அழகு திருமலைவேல் நம்பிதொகுத்து வழங்கினார்
 
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி தூதர குழு உறுப்பினர் சங்கரி நடராஜன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் பீர் முஹம்மது, நிர்வாகிகள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்மீனாள் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி. ஹனிபா, வார்டு உறுப்பினர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, வார்டு துணைச் செயலாளர் ராம்குமார் வார்டு செயலாளர் அசன் பீர்முகமது, இளைஞரணி துணை அமைப்பாளர சாகித் மைதீன், பொன்ராஜ் உட்பட பலர் கல்நது கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory