» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 7:54:55 AM (IST)
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், சகோதரர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியது.இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜர் ஆகவில்லை. அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் மட்டும் நேரில் மே ஆஜர் ஆகினர். இதையடுத்து, வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்தி, வழக்கின் அடுத்த விசாரணையை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முழுக்க முழுக்க சுயநலம், துரோகம்: பா.ஜ.க. கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது: முதல்வர் பேச்சு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:48:41 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:55:06 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி? அதிமுக உறுப்பினர் புகார் - திமுக எதிர்ப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:27:15 PM (IST)

தொடர்ந்து 5 நாட்களாக பதிவுத் துறை சர்வர் முடக்கம் : ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கண்டனம்
வெள்ளி 30, ஜனவரி 2026 3:10:41 PM (IST)

தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை: விஜய் குற்றச்சாட்டு
வெள்ளி 30, ஜனவரி 2026 12:13:08 PM (IST)

