» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலையில் கார்த்திகை மஹா தீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:45:15 PM (IST)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 3ம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பிறகு 'அனேகன் - ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கோயில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:26:47 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:48:07 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: காவல்துறை அனுமதி கோரி தவெக மனு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:30:25 PM (IST)

கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 4, டிசம்பர் 2025 4:10:42 PM (IST)

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)


.gif)