» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுப்பு : பெண் ஊழியர் மீது புகார்
ஞாயிறு 20, ஜூலை 2025 10:32:49 AM (IST)
பாளையங்கோட்டை ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுத்ததாக பெண் ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பத்தன்று தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு பேரங்காடி ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவர் வாங்கிய பொருட்களுக்கு பணமாக 100 ரூபாய் பழைய நோட்டு ஒன்றை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிய கடையின் பெண் ஊழியர் அந்த நோட்டை பார்த்துவிட்டு, ‘‘இந்த பணம் செல்லாது, வேறு நோட்டு கொடுங்கள்’’ கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினகுமார், ‘‘புழக்கத்தில் உள்ள நோட்டு தானே இது. அரசு இதுவரை இந்த பணத்தை செல்லாது என அறிவிக்காத நிலையில், ஏன் இதை வாங்கமறுக்கிறீர்கள்?’’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு கடை விற்பனையாளர், ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவியை அவதூறான பேசியதாக கூறி ரத்தினகுமார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதில், ‘‘சம்பந்தப்பட்ட ரேஷன்கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘ரேஷன் கடையில் சம்பந்தமில்லாத மேலும் பணியாளர்கள் போல சிலர் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக’’ கூறியுள்ளார். அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ரத்தினகுமார், ரேஷன் கடை பெண் ஊழியரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடையில் பழைய ரூ100 நோட்டை வாங்காதது குறித்த புகார் எங்களுக்கு வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் ரேஷன் கடை பணியாளர் தவறு செய்திருந்தது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)

தமிழ்நாட்டில் ஆக.2 முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
புதன் 30, ஜூலை 2025 4:31:20 PM (IST)

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
புதன் 30, ஜூலை 2025 4:26:59 PM (IST)

மின்கட்டண உயர்வு குறித்து நீலிக் கண்ணீர்: இபிஎஸ் மீது டிஆர்பி ராஜா விமர்சனம்!
புதன் 30, ஜூலை 2025 12:52:02 PM (IST)

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது!
புதன் 30, ஜூலை 2025 12:38:47 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: விஜய் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஜூலை 2025 12:29:36 PM (IST)
