» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 26-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)



தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

தென்னகத்தின் தொழில்நகரமாக உருவாகி உள்ள தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், வருகிற 26-ம் தேதி பிரதமர் மோடி, தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து

MvmmuruganJul 24, 2025 - 02:39:37 PM | Posted IP 172.7*****

Four Decades ago even in Meter Gauge period Tuticorin Railway station was well connected with two night service trains to Egmore (both main line janatha express and guard line pearl City express) and coimbatore fast passenger service daily Even five years back Tuticorin had day time link express to chennai Guard line Chennai express was the first train to chennai from southern district with more than hundred years old history Now currently this Guard line Chennai express is the only train to chennai from Tuticorin Tuticorin is denied of already existed meter gauge train services and additional new train routes because of biased attitude of railway ministry and southern railway Even though railway ministry gets huge revenue from Tuticorin via freight traffic railway ministry neglects the oldest railway station next to Madurai in South India Because of this Tuticorin public depends on Kovilpatti for Railway station for transport Tuticorin public demand justice from Railway ministry

Anthony Raj RJul 24, 2025 - 03:23:13 AM | Posted IP 162.1*****

வள்ளியூர் திருச்செந்தூர் சாலை விஞ் கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகிறது? தூத்துக்குடி கன்னியாகுமரி கிழக்கு கிழக்கு கடற்கரை சாலை என்னாச்சு? தென் மாவட்டத்தை புறக்கணிக்கும் மத்திய மாநில அரசுகள்? அனல் மின் நிலையம் அணு மின் நிலையம் ராக்கெட் ஏவுதளம் இதற்கு மட்டும் தென் மாவட்ட மக்களின் நிலங்களை அழிக்க வேண்டும் ?? அவர்களுக்கு தேவையான உள் கட்டமைப்பை செய்து கொடுக்க மனமில்லை? கடும் கண்டனத்துக்குரியது...

inbaJul 22, 2025 - 07:59:01 AM | Posted IP 172.7*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory