» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட மணப்பாறை மற்றும் கொளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9,16,30-ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
அதேபோல, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் (வ.எண்.06029/06030) வருகிற 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!
வியாழன் 3, ஜூலை 2025 8:55:59 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)
