» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை எக்ஸ்பிரசில் மழைநீர் ஒழுகியது; மின்சாரம் துண்டிப்பு- பயணிகள் அவதி
ஞாயிறு 14, ஜூலை 2024 2:42:53 PM (IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் ஒழுகி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்தநிலையில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், அந்த பெட்டி முழுவதும் வேகமாக தண்ணீர் ஒழுகியது. இதனால், தரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெட்டியில் மழைநீர் ஒழுகியதால் மின் விளக்குகளில் தண்ணீர் பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மின்சார துண்டிப்பால் குளிர்சாதன இணைப்பும் தடைபட்டது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் திகைத்து நின்றனர். மழைநீர் ஒழுகியது குறித்து அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து, ரயிலானது விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றதும் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் தேங்கிகிடந்த தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர், மின்தடை பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் தாமதமாக புறப்பட்டு நெல்லை நோக்கி சென்றது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் மழை நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)
