» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை எக்ஸ்பிரசில் மழைநீர் ஒழுகியது; மின்சாரம் துண்டிப்பு- பயணிகள் அவதி
ஞாயிறு 14, ஜூலை 2024 2:42:53 PM (IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் ஒழுகி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்தநிலையில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், அந்த பெட்டி முழுவதும் வேகமாக தண்ணீர் ஒழுகியது. இதனால், தரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெட்டியில் மழைநீர் ஒழுகியதால் மின் விளக்குகளில் தண்ணீர் பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மின்சார துண்டிப்பால் குளிர்சாதன இணைப்பும் தடைபட்டது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் திகைத்து நின்றனர். மழைநீர் ஒழுகியது குறித்து அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து, ரயிலானது விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சென்றதும் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியில் தேங்கிகிடந்த தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர், மின்தடை பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் தாமதமாக புறப்பட்டு நெல்லை நோக்கி சென்றது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் மழை நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி!!
வெள்ளி 21, மார்ச் 2025 4:55:33 PM (IST)

ஜாமின் கையெழுத்து போட வந்த ரவுடி வெட்டிக் கொலை: காவல்நிலையம் அருகே பயங்கரம்!
வெள்ளி 21, மார்ச் 2025 12:42:09 PM (IST)

துாத்துக்குடி மாவட்டத்தில் 10 சிப்காட் தொழிற்பூங்கா : சட்டசபையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!
வெள்ளி 21, மார்ச் 2025 12:31:38 PM (IST)

சாராயம் விற்பதே குற்றம், அதிலும் ஊழல் மிகப்பெரிய குற்றம் : சீமான் பேட்டி
வெள்ளி 21, மார்ச் 2025 12:09:08 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கொலை, குற்றச் செயல்கள் குறைந்துள்ளன: காவல்துறை விளக்கம்
வெள்ளி 21, மார்ச் 2025 11:57:46 AM (IST)
