» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்
திங்கள் 22, ஏப்ரல் 2024 10:57:58 AM (IST)
கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (ஏப்.22) எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்கிழமை (ஏப்.22) பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06789) நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், விருதுநகா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.