» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை-எழும்பூர் இடையே கோடைகால சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:48:09 PM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக் கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்
எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
NameApr 9, 2024 - 02:35:36 PM | Posted IP 162.1*****