» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நயினார் வழக்கு ஆவணங்கள்: சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:44:39 AM (IST)

தேர்தல் பறக்கும் படையால், 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட, நயினார் நாகேந்திரன் தொடர்பான வழக்கு ஆவணங்களை தாம்பரம் காவல் நிலைய போலீசார், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சமீபத்தில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 3.99 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், இந்தப் பணம், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரனும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த பண விவகாரம் தொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனால், தாம்பரம் காவல் நிலைய போலீசார், நயினார் நாகேந்திரன் பண விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை, எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory