» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை : கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சனி 6, ஏப்ரல் 2024 12:07:09 PM (IST)

கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் எஸ்.பி.ஐ. வங்கியின் எ.டி.எம். மையம் உள்ளது. அந்த எ.டி.எம். மையத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரத்தால் உடைத்துள்ளனர். பின்னர், ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். 

இந்த கொள்ளை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory