» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 12:03:27 PM (IST)



தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார். 

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு  உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, மாநகராட்சிக்குட்பட்ட நான்காம் கேட், குறிஞ்சி நகர் பூங்கா, ஹவுசிங் போர்டு மற்றும் எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலுள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட செயலாளர் ராஜாமணி, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், மற்றும் நிர்வாகிகள் இசக்கிமுத்து, மாரியப்பன், பெரியசாமி, கண்ணன், ஆவுடையப்பன், வேல்பாண்டி உட்பட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory