» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வெள்ளி 3, டிசம்பர் 2021 10:25:04 AM (IST)
ஜாவத் புயல் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் மற்றும் தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் டெய்லரின் உயிரை பறித்த புதிய ஸ்கூட்டர் : விளாத்திகுளம் அருகே பரிதாபம்!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 8:58:24 PM (IST)

அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:43:38 PM (IST)

தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் தாறுமாறாக கட்டணம் உயர்வு
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 4:29:28 PM (IST)

நிலத்தில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடித்து சிதறியது ... கோவை அருகே பரபரப்பு!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 3:41:05 PM (IST)

தூத்துக்குடியில் மூவர்ணத்தில் மண்பாண்டங்கள் விற்பனை : அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:28:21 PM (IST)

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பரோட்டா: மாற்றி யோசித்த நெல்லை இளைஞர்கள்!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:05:10 PM (IST)
