» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையைச் சார்ந்த அரசுப் பேருந்து ஒன்று, குமரி - கேரள எல்லைப் பகுதி வழியாகப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எல்லைப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அரசுப் பேருந்தை நோக்கிப் பெரிய கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாகப் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல் வீச்சுச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுநர் எல்லைப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)


