» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மரியாதை!
திங்கள் 1, ஜூன் 2026 3:30:44 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 58 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் வேப்பமூடு மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலையில் இன்று (01.06.2026) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: ‘கன்னியாகுமரி மாவட்டத்தின் சிற்பி ‘மார்ஷல்" என அனைத்து மக்களால் புகழப்பட்டு வரும் மாபெருந்தலைவர். குறிப்பாக ‘பெரியவர்" என பெரியவர்களால் போற்றப்படும் பெருமைமிக்க தலைவர், நீதிக்காக போராடிய நெஞ்சுரமிக்க தலைவர், நேர்மையோடு வாழ்ந்து காட்டிய தலைவர், தன்னலம் கருதாத தியாகச் செம்மல், மார்ஷல் நேசமணி 01.06.1968-ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்கள். அன்னாரின் 58-வது நினைவுநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட்சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மார்ஷல் நேசமணி அவர்களின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், மார்ஷல் நேசமணி அவர்களின் கொள்ளுப்பேத்தி குடும்பத்தினர், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் நவீன், மாதவன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


