» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)



குலசேகரம் அருகே உள்ள பட்டணம் கால்வாய் தொட்டிப்பாலத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினால், பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே சிற்றாறு பட்டணம் கால்வாய் பாய்கிறது. இந்தக் கால்வாயில் அம்பாடி, சக்கரபாணி, மாத்தூர் ஆகிய இடங்களில் நடைபாதையுடன் கூடிய நீளமான தொட்டிப்பாலங்களும்; குலசேகரம் அருகே செறுதிக்கோணம் காவல் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபாதை இல்லாத நீளம் குறைந்த தொட்டிப்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், செறுதிக்கோணம் காவல் நிலையப் பகுதியில் உள்ள தொட்டிப்பாலத்தின் கீழே பல வீடுகள் உள்ளன. இந்தத் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது பாலத்தின் பல இடங்களில் செடி கொடிகள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டுக் குடிநீர் வெளியேறியும் வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நாளடைவில் இந்த விரிசல் அதிகமாகி, பாலம் முழுமையாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாசனப் பணிகள் நிறைவடைந்தவுடன் கால்வாயில் தண்ணீரை நிறுத்திவிட்டு, தொட்டிப்பாலத்தில் உள்ள விரிசல்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory