» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, வரும் 04.03.2026 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

04.03.2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமையான 07.03.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும்.

கருவூலச் செயல்பாடுகள்: இந்த உள்ளூர் விடுமுறை ‘செலவாணி முறிச் சட்டம் 1881’ (Negotiable Instruments Act 1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே, மாவட்டத் தலைமைக்கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு சார்ந்த அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory