» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் அதிவிரைவு ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 16122 திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், இரவு 23:45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அகால நேரத்தில் ரயில் நிலையம் வருவதால், பயணிகள் தங்களின் அடுத்தகட்ட பயணத்திற்காக அதிகாலை 4:00 முதல் 5:00 மணி வரை மாநகரப் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது: "இந்த ரயிலில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளே அதிகம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களே அதிகம் பயணிக்கின்றனர். நள்ளிரவில் தாம்பரம் வந்தடைவது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மிகுந்த உடல் உபாதைகளையும் தருகிறது."
வண்டி எண் 16122-ஐ திருவனந்தபுரத்திலிருந்து மதியம் சுமார் 15:30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைத்தால், அது மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 22658 நாகர்கோவில் – தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்கள் அமலுக்கு வந்தால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

