» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

நாகர்கோவிலில் அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு மாநகர அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி மாமன்ற உறுப்பினரும் வடக்கு மண்டல செயலாளருமான ஸ்ரீலிஜா தலைமையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ. நாஞ்சில் முருகேசன் ஏற்பாட்டில் வடசேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட புதுமண தம்பதிகளுக்கு பட்டுபடவை, பட்டுவேட்டி, பொங்கல் பானை கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பொங்கல் சீர் வரிசைகள் வழங்கி சிறப்பித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

