» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினத்தையொட்டி, அன்னராது திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இன்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், களியக்காவிளை பேரூராட்சி செயல்அலுவலர் சந்திர கலா, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பெனட் ராஜ், பேரூராட்சி உறுப்பினர் ரிப்பாய், கிராம நிர்வாக அலுவலர் ஜீனா ஜாஸ்மின், வருவாய் அலுவலர் தேவிகா, பொதுமக்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)


.gif)