» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு அளித்தார்.
புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார். நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரயில், கன்னியாகுமரி – ஹைதராபாத் தினசரி விரைவு ரயில் ஆகிய புதிய ரயில்களின் தேவையை முன் வைத்தார்
ரயிலகள் நீட்டிப்பு: புதியதாக அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூர் – திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவ்ரா – திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
ரயில் நிறுத்தங்கள்: காந்திதாம் விரைவு ரயில் மற்றும் ஜாம்நகர் ரயில்கள் குழித்துறை ரயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரயில் பள்ளியாடி ரயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.
உட்கட்டமைப்பு வசதிகள்: ரயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார். கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட்(electric loco shed) , நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி இரயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டி காட்டி கோரிக்கை வைத்தார்.
தொலைநோக்கு திட்டங்கள் : ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அது போன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)


.gif)