» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!

சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

குமரி அருகே உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி தனது 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). மதபோதகராக உள்ளார். இவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6, 3 வயதில் 2 மகன்களும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று கிங்ஸ்லியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். 

அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் ஸ்கிப்பிங்  கயிற்றால் சரமாரியாக அடித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவல்பேரில், கருங்கல் போலீசார் அங்கு வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர்.

விசாரணையில் கிங்ஸ்லி போலீசாரிடம் கூறியதாவது, தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தான் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளை காணவில்லை. அவர்கள் பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

எனவே அவர்களின் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதாக கருதி அவர்கள் உடம்பில் இருந்து சாத்தானை விரட்ட ஸ்கிப்பிங் கயிற்றினால் கட்டி வைத்து அடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பகத்தில் சோ்த்தனர்.


மக்கள் கருத்து

NAAN THAANமே 31, 2025 - 02:27:50 PM | Posted IP 172.7*****

KATROOR ATHIGAM ULL AKUMARI MAAVATTAM , MUTTAA KOO

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory