» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)
குமரி அருகே உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி தனது 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவருடைய குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி, 3 குழந்தைகளையும் ஸ்கிப்பிங் கயிற்றால் சரமாரியாக அடித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அளித்த தகவல்பேரில், கருங்கல் போலீசார் அங்கு வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர்.
விசாரணையில் கிங்ஸ்லி போலீசாரிடம் கூறியதாவது, தினமும் ஊழியத்துக்கு செல்லும்போது குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தான் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளை காணவில்லை. அவர்கள் பக்கத்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
எனவே அவர்களின் உடம்பில் சாத்தான் புகுந்து விட்டதாக கருதி அவர்கள் உடம்பில் இருந்து சாத்தானை விரட்ட ஸ்கிப்பிங் கயிற்றினால் கட்டி வைத்து அடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பகத்தில் சோ்த்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி நினைவு நாள்: ஆட்சியர் அழகுமீனா மரியாதை!
திங்கள் 2, ஜூன் 2025 12:02:04 PM (IST)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

NAAN THAANமே 31, 2025 - 02:27:50 PM | Posted IP 172.7*****