» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: காவல்துறை நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை!

செவ்வாய் 20, மே 2025 4:51:20 PM (IST)

தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25ஆயிரம் மதிப்புள்ள பணம், மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

தூத்துக்குடி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் அழகுமுருகன் (47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2:45 மணிக்கு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று 10ஆயிரம் ரொக்கபணம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு 1-00 மணி அளவில் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஆழ்வார் மளிகை கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

வேண்டும்மே 20, 2025 - 09:20:43 PM | Posted IP 104.2*****

வேண்டும் குற்ற பரம்பரை சட்டம் வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory