» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வங்கி மேலாளர் மீது தாக்குதல்: திமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
செவ்வாய் 20, மே 2025 8:45:32 AM (IST)
தூத்துக்குடியில் தீயணைப்பு கருவியால் வங்கி மேலாளரை தாக்கியதாக திமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் ஜெயக்குமார் (55), போல்பேட்டை பகுதி திமுக செயலாளராக உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீட்டு லோன் வாங்கி இருந்தாராம் அந்த லோனை சரிவர கட்டவில்லையாம். இதையடுத்து வங்கி மேலாளராக பணிபுரியும் கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சேர்ந்த வசந்த் மகன் பாரத் தேசாய் (45) மற்றும் வங்கி ஊழியர்கள் நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று லோன் கட்டும்படி கூறினார்களாம்..
இந்த நிலையில், பின்னர் மாலை 6 மணி அளவில் வங்கிக்கு சென்ற ஜெயக்குமார் அவரது தம்பி காமராஜ் மற்றும் 2பேர் ஆகியோர் தனி அறையில் இருந்த வங்கி மேலாளரிடம் என் வீட்டுக்கு வந்து எப்படி பணம் கேட்கலாம் என்று தகராறு செய்து அருகில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வங்கி மேலாளரை தாக்கினார்களாம். இதை பார்க்க வங்கி ஊழியர்கள் சத்தம் போடவே அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம்.
இதில் காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் வங்கி ஊழியர் அளித்த புகாரின் பேரில் திமுக பகுதி செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
டேய் மீடியாமே 21, 2025 - 09:07:40 PM | Posted IP 172.7*****
"த்துக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி " அந்த வங்கி பெயர் ஒழுங்கா போடுங்க
MGR FANSமே 20, 2025 - 03:25:55 PM | Posted IP 162.1*****
இவர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் செய்வார்கள், பலகாலமாக இவர்கள் அப்படித்தான் . MGR இருந்தவரை இவர்கள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதன் பிறகு திரும்ப ஆட்டம்தான்.....
srinivasanமே 20, 2025 - 11:53:59 AM | Posted IP 172.7*****
Dmk people is always like this ..DMK is always BAD Curse of Tamil nadu.....
Indianமே 20, 2025 - 09:45:17 AM | Posted IP 162.1*****
It is a normal one.
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

முட்டாள்மே 21, 2025 - 09:09:28 PM | Posted IP 172.7*****