» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காரில் கடத்தி வந்து இளம்பெண் எரித்துக் கொலை? போலீசார் விசாரணை

திங்கள் 19, மே 2025 4:58:03 PM (IST)

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்து இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரம், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் எரிந்த நிலையில் கார் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பார்வையிட்டனர். 

அங்கு கார் எரிந்த நிலையில் கிடந்த தோடு, பின் சீட்டில் மனித உடல் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு,சாம்பலும், எலும்புமாக கிடந்தது. இதைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. முதற்கட்ட விசாரணையில் எரிக்கப்பட்டது பெண்ணாக இருக்கலாம் என்று தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, எரிக்கப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? காரில் கடத்தி வந்து எரிக்க காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் மாயமான பெண்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

குற்றமே 19, 2025 - 05:28:19 PM | Posted IP 172.7*****

பரம்பரையா இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory