» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காரில் கடத்தி வந்து இளம்பெண் எரித்துக் கொலை? போலீசார் விசாரணை
திங்கள் 19, மே 2025 4:58:03 PM (IST)
தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்து இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரம், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் எரிந்த நிலையில் கார் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பார்வையிட்டனர்.
அங்கு கார் எரிந்த நிலையில் கிடந்த தோடு, பின் சீட்டில் மனித உடல் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு,சாம்பலும், எலும்புமாக கிடந்தது. இதைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. முதற்கட்ட விசாரணையில் எரிக்கப்பட்டது பெண்ணாக இருக்கலாம் என்று தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, எரிக்கப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? காரில் கடத்தி வந்து எரிக்க காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் மாயமான பெண்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

குற்றமே 19, 2025 - 05:28:19 PM | Posted IP 172.7*****