» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாலபிரஜாபதி அடிகளாரின் துணைவியாா் மறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு அஞ்சலி
செவ்வாய் 3, டிசம்பர் 2024 5:28:13 PM (IST)

சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரின் மனைவி ரமணிபாய் அய்யா மறைவைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அறங்காவலர் பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களின் மனைவி ரமணிபாய் அய்யா வைகுண்டர் பதம் அடைந்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், தாமரை பாரதி, இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி இராமகிருஷ்ணன், பாபு, அகஸ்டிசன், ஆனந்த், கேட்சன், பூதலிங்கம், மரிய சிசுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சாமித்தோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப் பதி அறங்காவலா் பாலபிரஜாபதி அடிகளாரின் துணைவியாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சாமித்தோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப் பதி அறங்காவலா் பாலபிரஜாபதியின் துணைவியாா் ரமணிபாய் மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். துணையை இழந்து வாடும் பாலபிரஜாபதிக்கு தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)
