» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை : குளங்கள், தடுப்பணைகளில் எஸ்.பி., ஆய்வு!
செவ்வாய் 26, நவம்பர் 2024 8:54:39 PM (IST)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், தடுப்பணைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று (26.11.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளான, கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், தடுப்பணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று பார்வையிட்டு குளத்தின் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து, குளத்தின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, காவல்துறையினருக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)


.gif)
IndianNov 28, 2024 - 03:36:39 PM | Posted IP 172.7*****