» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:36:45 PM (IST)
குமரி மாவட்டத்தில்,40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நான்கு வாரங்கள் உடைய 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 900 அலகுகள் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நான்கு வாரமுடைய 40 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் ரூ.1600/- செலவில் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்திட பயனாளி ஊரக பகுதியில் உள்ளவராகவும் அந்தந்த கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராகவும் கோழி வளர்ப்பில் ஆர்வமுடையராக இருத்தல் வேண்டும். 30% பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே அரசால் வழங்கப்பட்ட இலவச ஆடு/மாடு/கோழிகள் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
மேற்கண்ட தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகலுடன், அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்திடவும் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 50% மானியத்தில் கோழிகள் கோரி விருப்பம் விண்ணப்பம் அளித்த பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

m.malkiyaOct 11, 2024 - 05:27:54 PM | Posted IP 172.7*****