» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் நீக்கம்: தெக்ஷண மாற நாடார் சங்கம் வருத்தம்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 5:44:09 PM (IST)
தமிழக அமைச்சரவையில் நாடார் சமுதாய பிரதிநிதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தெக்ஷண மாற நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கலிதாசன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஏ.செல்வராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "நாடார் சமுதாய மக்கள் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முதலிடத்திலும், சென்னை உள்பட கொங்கு மண்டலங்களில் அதிக அளவிலும் வசித்தும், வணிகம் செய்தும், கல்வி நிறுவனங்களையும் சிறப்புடன் நடத்தி கல்வி வழங்கி வருகின்றனர்.
நாடார் சமுதாய ஓட்டுக்கள் இல்லாத சட்டமன்ற தொகுதிகளே தமிழகத்தில் இல்லை என்பது குறிப்படத்தக்கது. அனைத்து தொகுதிகளிலும் கணிசமான அளவில் நாடார் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாயத்தில் நாடார் சமுதாயமும் ஒன்று.
இதுவரை நாடார் சமுதாயத்திற்கு தமிழக அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் இருந்துவந்தது. இருப்பினும் தங்களது ஆட்சியில் நாடார் சமுதாயத்திற்கு 3 அமைச்சர் பதவியும் சபாநாயகர் பதவியும் வழங்கி கௌரவப்படுத்தினீர்கள். ஆதலால் எங்கள் சமுதாய மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து வெற்றிபெற உறுதுணையாக இருந்தார்கள். குமரி மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக மனோ தங்கராஜ் அவர்களை அமைச்சர் ஆக்கி அழகுபார்த்தீர்கள்.
அவரும் சிறப்புடன் செயல்பட்டு மக்கள்பணியாற்றி வந்தார். தற்போது திரு. T. மனோ தங்கராஜ் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி குமரி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக இல்லாமல் ஆக்கியது குமரி மக்கள் உள்பட ஒட்டு மொத்த நாடார் சமுதாய மக்களையும் வருத்தமடைய செய்துள்ளது. தங்கள் அரசின் மீது ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாண்புமிகு. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக எங்கள் சமுதாயத்திற்கு மீண்டும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சிறப்பிக்க திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பாகவும் அனைத்து நாடார் சமுதாய மக்கள் சார்பாகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)


.gif)