» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2பேர் மீது வழக்கு: 2 ஆட்டோக்கள் பறிமுதல்!
சனி 28, செப்டம்பர் 2024 5:47:23 PM (IST)

நாகர்கோவிலில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச் சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்த போது இருவரும் குடிபோதையில், ஆட்டோ இயக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆட்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக தலா ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை: நெல்லை கார் டிரைவர் கைது!
வெள்ளி 8, மே 2026 8:27:18 AM (IST)

மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு: குமரி, நெல்லை பயணிகள் எதிர்பார்ப்பு!
வியாழன் 7, மே 2026 12:36:11 PM (IST)

குமரியில் எடுபடாத தவெக அலை: ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் தொண்டர்கள் சோகம்
செவ்வாய் 5, மே 2026 8:10:21 PM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)


